tamilnadu

img

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகல் சமர்பிப்பு

பொள்ளாச்சி, பிப். 16-  பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தில் கிராம சபைக்கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மா னங்கள் அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற் குட்பட்ட ஆச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த ஜன.26ஆம் தேதியன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  மின்சாரம் குறைபாடு உள்ள ஆச்சிப்பட்டி கிராம பகுதிக ளில் பழுதான தெருவிளக்குகளை மாற்றிடவும், மற்றும் கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வடக்கிபாளை யம், ஆச்சிப்பட்டி பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லவும், குடிநீர் தட்டுப் பாடின்றி கிடைத்திடவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் விடுத்த கோரிக்கைளை தீர்மானமாக நிறைவேற்றம் செய் யப்பட்டது.  பின்னர், இத்தீர்மானத்தின் நகலை பொள் ளாச்சி  வட்டார போக்குவரத்து மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி,  மின்சாரத்துறை  அதிகாரிகளிடம் கடந்த வெள்ளியன்று நேரில் சந்தித்து  ஆச்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன் தலைமையில்  கொடுக்கப்பட் டது. இதில், சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் கணேசன்  மற்றும்  லோகநாதன், முருகேசன், திமுக ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராதாமணி, சின்னாம்பாளையம் ஊராட்சி நகர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் கே.டி.பிச்சை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.